உலகத்தின் மக்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் புதுப்புது அப்டேட்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் பொருளாதார நிலை சரிந்து வருவதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த சமூக வலைத்தளங்களில் நன்மைகள் இருப்பது போல ஹேக்கர்களின் தீய செயலுக்கும் பயன்படுகிறது. அதாவது தனிப்பட்ட செய்திகளை பதிவிடும் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்து இணையத்தில் விற்று வருகின்றனர். எனவே இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலைத்தளங்களின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிவந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதனால் இத்தளங்களின் நிறுவனமான மெட்டாவுக்கு 413 மில்லியன் டாலர் அபராதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி இந்த செயல் அரங்கேறுவதால் இதற்கான காரணங்களை விளக்கவும் உத்தரவிட்டுள்ளது.