பொதுவாக டேங்கர் லாரிகளில் மூலம் பெரும் அளவிலான எண்ணெய்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் டேங்கர் லாரியில் எண்ணெய் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது அந்த டேங்கர் லாரி டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது அந்த லாரியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த லாரி சென்ற மேல்பாலம் முழுவதும் அடர்ந்த தீக்காடு போல் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க தீ இணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.