மீண்டும் ரசிகர்களிடம் பல்பு வாங்கிய மனோபாலா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய பிரபலமான மனோபாலா பல விமசனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் தற்போதும் விம்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

மனோ பாலா

தமிழ் திரையுலகில் முக்கிய பிரபலமாக திகழ்பவர் தான் மனோபாலா. இயக்குனராக, தயாரிப்பாளராக அதே சமயம் காமெடியனாகவும் வலம் வருபவர் தான் இவர். இப்படி சினிமா துறையில் பல டாஸ்குகளை செய்வது சாதாரண விசயம் அல்ல. மேலும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலம் இருந்து வருகிறது.

ஒரே ஒரு போட்டோவை தானே போட்டேன் அதுக்கு இப்படியா?கதறும் மனோபாலா!!
!

இவரது காமெடிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தான் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் படுத்தபடி போட்டோ எடுத்து அனுப்ப அது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

அவருக்கு கொரோனா என்று கூட பீதியை கிளப்பினர். அதற்கு அவரே பதிலடியும் அளித்தார். இப்பொழுது அவர் தனது வலைப்பக்கத்தில் ஸ்டாலின் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது முதன்முதலாக கொரோனா வார்டுக்குக்குள் சென்ற முதலைச்சர் என்ற பெருமை ஸ்டாலினை சேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னமே உத்தரகண்ட், மற்றும் ஹரியானா முதலமைச்சர்கள் சென்றுள்ளதை ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மனோபாலா மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here