தென் இந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், சினிமா வியாபாரம் என்று பார்த்தால் மலையாள திரையுலகம் சற்று பின்தங்கிய நிலவரத்தில் தான் இருக்கிறது. இப்படி இருக்க, இந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் உலக அளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
IPL 2024: “ஒருவேளை இருக்குமோ..?” சூர்யகுமாரின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!!
கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. அப்படி வெளியாகி 10 நாட்களில் 100 கோடி வசூல் குவித்த இந்த படம் ஒரு மாதத்தில் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் அதிக வசூல் குவித்த முதல் மலையாளப் படமாகவும், இந்தியப் படங்களில் 8 அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இருக்கிறது.