ஊரடங்கை வாபஸ் செய்த மாநில அரசு…, வெளியான முக்கிய அறிவிப்புகள்…, முழு விவரம் உள்ளே!!

0
ஊரடங்கை வாபஸ் செய்த மாநில அரசு..., வெளியான முக்கிய அறிவிப்புகள்..., முழு விவரம் உள்ளே!!
ஊரடங்கை வாபஸ் செய்த மாநில அரசு..., வெளியான முக்கிய அறிவிப்புகள்..., முழு விவரம் உள்ளே!!

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டமானது வன்முறையாக மாறியதை அடுத்து, அம்மாநில அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, வன்முறை அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது. இதையடுத்து, மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் முழுமையாக களமிறங்கி வன்முறையை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, தற்போது 5 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை வாபஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் சில மணிநேரங்களுக்கு தடை உத்தரவுகள் நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளக்ஸ், பேனர்களால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.., மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!!

மேலும், வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களில் ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார். இந்த கலவரத்தினால், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 15ம் தேதி வரை மூடப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here