சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஆர்.பிரியா மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் சென்னையில் 15 மண்டலங்களிலும் உள்ள பொதுமக்களை மாதத்திற்கு ஒருமுறை நேரில் சந்தித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த சந்திப்பில் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு, தீர்வு விரைந்து மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி நாளை (செப்டம்பர் 20) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை அம்பத்தூர் சிப்காட் வளாகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மண்டலம் 7ல் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!