பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இனி Bagக்கு குட் பை! புத்தகம் மற்றும் நோட்டை ஒன்றாக தொகுக்க முடிவு!!

0
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இனி Bagக்கு குட் பை! புத்தகம் மற்றும் நோட்டை ஒன்றாக தொகுக்க முடிவு!!
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இனி Bagக்கு குட் பை! புத்தகம் மற்றும் நோட்டை ஒன்றாக தொகுக்க முடிவு!!

பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க, 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களின் நோட் மற்றும் புத்தகங்களை ஒன்றாக தொகுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

அரசு முடிவு:

பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே புத்தகம் மற்றும் நோட்டுகளை சுமக்க வேண்டிய சோகம் ஏற்படுகிறது. தற்போது, இதனை கவனத்தில் கொண்ட மகாராஷ்டிரா அரசு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை, ஒன்றாக தொகுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது 2023-24 ஆம் கல்வி ஆண்டில், குழந்தைகளின் புத்தகப் பை எடையை குறைக்க ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துச் செல்லும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பாட புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், மாணவர்கள் குறிப்புகளை எழுத வெற்றுத்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தாள்கள், அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளே மாணவர்களுக்கு இதனை வழங்கும்.

இந்த குறிப்பிட்ட மருந்து விற்பனைக்கு தமிழகத்தில் தடை.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்!!

இதனால் மாணவர்களின் புத்தகப் பை எடை, என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. மாணவர்களின் 4 பருவத்துக்கும், 4 தனி புத்தகங்கள் இதன் மூலம் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து தனியார் பள்ளிகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here