மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் அளிக்காததால் வயதான முதியவர் ஒருவரை மருத்துவமனையில் கட்டிபோட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
முதியவர்
ஆரம்பத்தில் இவரது குடும்பம் இவரின் சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவரை டிஸ்சார்ஜ் செய்யும்போது மருத்துவமனையில் கூடுதலாக 11,270 கட்ட சொல்லி இருக்கின்றனர். ஆனால் அவரது குடும்பம் அந்த தொகையை செலுத்ததால் அவர் வெளியே சென்றுவிட கூடாது என்பதற்காக அவரை அவர் சிகிச்சை எடுத்த படுக்கையிலேயே கட்டி போட்டுள்ளன. இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோன – 2.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.