மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். அங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பை பெருக்குதல் ஆகியவை பற்றி முதலீட்டாளர்கள் முன்னிலையில் விளக்கினார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
புதுப்புது அறிவிப்புகள்..!
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய அவர் தனது மாநிலத்தில் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இவர் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த யுவ ஸ்வபிமான் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தவும் மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் காலஅளவை கூட்டியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க…!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் படித்து வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 27.79 லட்சம் ஆகும். இது பழைய எண்ணிக்கையை 20.77 லட்சத்தை விட மிக அதிகமாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 17,506 பேர் வேலை பெற்றுள்ளனர். மேலும் 25 புதிய நிறுவனங்கள் மூலம் 13,740 பேர் வேலைவாய்ப்பை உருவாக்கி கொண்டனர் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை உயர்வு..! 365 நாள் வேலை..!
யுவ ஸ்வபிமான் யோஜனா திட்டத்தின் மூலம் வேலை இல்லாதோருக்கான நிதியுதவி ரூ.1,000ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை தற்காலிக வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் 365 நாட்களாக உயர்த்த அரசு தாயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் நோக்கம் ரூ.200 கோடி செலவில் 25,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ஆகும்.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
பதிவு செய்து காத்திருக்கும் வேலையற்ற இளைஞர்களை தேர்வு செய்து தகுதியின் அடிப்படையில் தற்காலிக வேலை வழங்க இளைஞர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |