இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப் செயலி மூலம் நாளுக்கு நாள் பல வினோத சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்போது நிலக்கோட்டையில் நடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிலக்கோட்டையை சேர்ந்த ரோஷன் என்பவர் பேஸ்புக் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சில நாட்களில் இவர் திடீரென உஷாவிடம் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் ஆத்திரமடைந்த உஷா அவரது புகைப்படத்துடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்து ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நிலக்கோட்டை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இது மட்டுமல்லாமல் அவரின் தந்தையை வழி மறித்து உஷாவின் குடும்பத்தினர் 5 லட்சம் பணம் தரும்படி கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார் தற்போது உஷாவின் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர்.