இன்றைய காலகட்டத்தில் உலகமே டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில், சிறுமி முதல் முதியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவம் அதிகமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாலியல் செய்த சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவரை பவான் நிஷாத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று பவான் நிஷாத் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து வழக்கை திரும்ப பெறுமாறு கேட்ட போது, அந்த 19 வயது சிறுமி மறுத்துள்ளார். இதனால் காண்டான அந்த நபர் தனது சகோதரனுடன் சேர்ந்து சிறுமியை கோடாரியால் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரையும் காவல்துறை தேடி வருகிறது.
காதலித்து ஏமாந்த பெண்.., தெருத்தெருவாய் போஸ்டர் ஒட்டிய சம்பவம்.., வெளியான திடுக்கிடும் தகவல்!!