தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது பல்வேறு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மார்ச் 2 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டது. மேலும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில், இது வரை தளர்வுகளுடன் அமலில் இருந்த ஊரடங்கு, வருகிற பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால், இன்னும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மார்ச் 2 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு தற்போது கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி பள்ளிகளையும்(LKG, UKG), மழலையர் விளையாட்டு பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- திருமணத்தில் 200 நபர்களும், இறப்பு சார்ந்த துக்க நிகழ்வுகளில் 100 நபர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 16 முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்