தமிழகத்தில் வருகிற திங்கள்கிழமை காலை 4 மணி முதல் ஊரடங்கு முடிவுக்கு வரும் சூழலில் தற்போது இதனை நீட்டிக்க தமிழக அரசிற்கு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கையை அமல்படுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மேலும் ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டது, இருந்தும் கொரோனா கட்டுக்குள் வாராத காரணத்தினால் சில தினங்களுக்கு பின்பு ஊரடங்கு நடவடிக்கை மிக கடுமையாக்கப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதன் எதிரொலியாக காரணம் இன்றி வெளியே சுற்றி திரிபவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் வருகிற திங்கள் உடன் ஊரடங்கு நடவடிக்கை முடிவுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் இன்று இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்று ஒரு நாளில் 10 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி – அரசு பெருமிதம்!!
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து தமிழக அரசிற்கு பரிந்துரை ஒன்றை செய்துள்ளனர்.அதன்படி தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.