நட்பு ரீதியிலான கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியானது தொடர்ந்து கோல் மழை பொழிந்து அசத்தியத்துடன், மெஸ்ஸி தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார்.
அர்ஜென்டினா:
FIFA உலக கோப்பை கால்பந்து தொடரை வென்ற அர்ஜென்டினா அணியானது, தற்போது நட்பு ரீதியிலான கால்பந்து தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், குராக்கோ அணியை எதிர்த்து, மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி விளையாடியது. இதில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி 20 வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் மூலம், மெஸ்ஸி சர்வதேச அளவில் தனது 100 வது கோலை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து, மெஸ்ஸி அடுத்ததடுத்து, 33 மற்றும் 37 வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால், சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களுக்கான பட்டியல் மெஸ்ஸி 102 கோல்களுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், போர்ச்சுகலின் ரொனால்டோ 122, ஈரானின் அலி டேய் 109 கோல்களுடன் முதலிரு இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குராக்கோ அணிக்கு எதிரான போட்டியில், அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி 3 கோல் அடிக்க, இவரை தொடர்ந்து, நிக்கோலஸ் கோன்சாலஸ், என்ஸோ ஜெரேமியாஸ், ஏஞ்சல் டி மரியா மற்றும் கோன்ஜாலோ தலா ஒரு கோல்களை அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில், அர்ஜென்டினா அணியானது 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.