தமிழ்நாட்டில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆப்சென்ட் ஆன மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் இவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தேர்விலும் குறிப்பிட்ட சில மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் செய்முறை தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க உள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதன்படி 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை கண்டறிந்து நாளை மறுநாளுக்குள் (மார்ச் 31) தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சர்வதேச அளவில் சதம் அடித்த மெஸ்ஸி…, தொடர் கோல்களை அடித்து அர்ஜென்டினா அணி அபாரம்!!
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.