கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக உள்ள கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக நேற்று (ஜன. 9) முதல் இரண்டாவது நாளாக அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை 2-வது நாளாக இன்றும் (ஜன. 110) நீடித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பல சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் வந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!