வேகத்தில் அரைசதம் கண்ட இந்திய பவுலர்…, சர்வதேச அளவில் டாப் 2வில் இடம் பிடித்து அசத்தல்!!

0
வேகத்தில் அரைசதம் கண்ட இந்திய பவுலர்..., சர்வதேச அளவில் டாப் 2வில் இடம் பிடித்து அசத்தல்!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, நேற்று புது உத்வேகத்துடன் 3 வது போட்டியை விளையாடியது. இதில், பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் அசத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தக்காளி இல்லாமல் வித்தியாசமான சுவையில் இந்த சட்னியை சமைத்து பாருங்க., டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!!

இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய மூவரின் முக்கிய விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றியதன் மூலம் டி20 அரங்கில் அதிவேகமாக (30 போட்டிகளில்) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் மற்றும் 2வது சர்வதேச வீரரானார். இதற்கு முன் இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல் 34 போட்டிகளில் இந்த மைக்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 26 போட்டியில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தை, இலங்கையின் வனிந்து ஹசரங்கா உடன் (30) இந்தியாவின் குல்தீப் யாதவ் பகிர்ந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here