சமீபத்தில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது . இதற்கு அடுத்ததாக இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட போவது யார் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இத்தொடருக்கான விக்கெட் கீப்பிங் விருப்பங்களில் ஒருவராக கேஎல் ராகுல் கருதப்படுகிறார். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவரின் தற்போதைய பார்ம் தான். உலகக் கோப்பை தொடரில் கூட அணியின் நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டார். இதனை கருத்தில் கொண்டு அவரை டெஸ்ட், T20 மற்றும் ஒருநாள் ஆகிய பார்மட்களுக்கு முழு நேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, செயல்படுத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டம் வைத்துள்ளது.
T20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்களா சீனியர் வீரர்கள்.? புதிய திட்டத்தில் BCCI..!