இந்தியாவில் உள்ள ஏழை எளிய மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலைக்கு ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். இதில் குறிப்பாக, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எந்த பகுதிகளிலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும், பண பரிவர்த்தனையை எளிமையாக்கும் டிஜிட்டல் முறையான UPI திட்டம் என பல புதுமைகளை அரசு புகுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு கொடுக்கபட்டாலும், இதில் அரிசி இலவசமாகவே குடும்ப அட்டை தாரர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு அரிசியை வழங்கி வருகிறது.
கேரளாவில், அரிசி இலவசமாக பெறும் நீலம் மற்றும் வெள்ளை அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இதற்கான ஒத்திக்கிடையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நீல அட்டை உறுப்பினர்களுக்கு 2 கிலோ அரிசியை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது ஆண்டுக்கு மொத்தம் 14.25 லட்சம் டன் அரிசியை மாநிலத்துக்கு ஒதுக்குகிறது. இதில், 4.8 லட்சம் டன் நெல், கேரளாவில் சேமித்து வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.