தற்போதைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல தவறுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனைகளை அரசாங்கம் கொடுத்த போதிலும் சில திருந்தாத விஷ கிருமிகள் சம்பவத்தில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது கோவை மாநகரத்தில் சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் அதற்கு பக்கத்து ஏரியாவில் இருக்கும் ஒரு பெண்ணை வெறித்தனமாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் காட்டிய நிலையில் ஓராண்டு கழித்து திருமணம் செய்து வைக்க பேசி வந்தனர். இந்நிலையில் அந்த காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட இரவு 12 மணியளவில் பிரசாந்த் குடிபோதையில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை குவிக்க இருக்கும் விராட் கோலி…, வெளியான புள்ளி விவரம் இதோ!!
வீட்டின் கதவை தட்டி ரகளை செய்த அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் ரகளை செய்ய ஆரம்பித்தார். அதன் பின்னர் அந்த காதலியின் தாய் மாமாவுக்கு பிரஷாந்துக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவருடைய தாய் மாமா பிரசாந்தை அரிவாளால் வெட்ட தொடங்கியுள்ளார். அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.