இந்தியாவில் இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை நிரந்தரம் இல்லாமல் மாதத்திற்கு மாதம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த சிலிண்டரின் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளாவதில் தகுதியான குடும்பங்களை தேர்தெடுத்து அவர்களுக்கு அரசாங்கம் நிவாராணம் வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் ராஜஸ்தான் முதல்வர் ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க சென்றிருந்த போது மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இந்திரா காந்தி கேஸ் சிலிண்டர் மானிய திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 80 லட்சம் குடும்பங்கள் இந்த மானியத்தை பெறுவதில் தகுதி வாய்ந்தவர்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் இந்த மானியத்திற்கு தகுதி பெற்றவர்களில் சுமார் 14 லட்சம் குடும்பங்களை தேர்ந்தெடுத்து நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. சொல்ல போனால் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தலா 640 சிலிண்டர் மானியமாக இன்று வழங்கப்பட இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.