அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், விலைவாசி உயர்வை சமாளிக்க ஏதுவாக அகவிலைப்படி உயர்வை ஆண்டுக்கு இருமுறை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி விரைவில் மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் AICPI குறியீடு அடிப்படையில் 4 சதவீதம் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் குறைந்து வருவதால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை தான் உயர்த்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…, குறையும் இலவச அரிசி அளவு?? வெளியான தகவல்!!
இப்படியாக 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், மத்திய அரசு துறையில் உள்ள சுமார் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.