இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்றின் பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. இந்த நோய் தொற்றின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது கேரளா அரசு. அதுமட்டுமில்லாமல் இந்த நோய் தொற்றின் தடுப்பு நடனவடிக்கைகளை பித்ரு ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு கேரளா செல்ல உள்ளது.
கேரளா விரையும் 6 பேர் கொண்ட குழு…
கொரோனா நோய் தோற்று அதிகளவில் இந்தியாவில் பரவி வந்தது. இந்த நோய் தாக்கத்தால் பல பாதிப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் தளர்வுகள் என பலவற்றை மாநில அரசும் மத்திய அரசும் பின்பற்றி வந்தது. இந்நிலையில் கொரோன பரவலை பல போராட்டங்களுக்கு பின் ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் கேரளா மாநிலத்தில் குறைந்து வந்த தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நோய் தொற்று அதிகரிப்பு மூன்றாம் அலைக்கான தொடக்கம் போல் உள்ளது எனவும். இந்த பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது கேரளா அரசு.
அதுமட்டுமில்லாமல் கொரோனா இப்பொழுது அதிகளவில் கேரளாவில் மட்டும் பரவுவதற்கான காரணம் என்ன என்று அறிந்து கொள்ள மற்றும் நோய் கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 6 பேர் கொண்ட குழு ஒன்றை கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளது. அந்த ஆய்வில் ஆக்சிஜன் பற்றி மற்றும் மருத்துவமனை படுக்கை வசதிகள் மற்றும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்று ஆராய உள்ளனர். இத்துடன் கேரளா மாநிலம் முழுவதும் வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் கடந்த 2 நாட்களில் மாட்டும் 22ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த கேரளா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்