படகில் குதூகலமாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படகில் குதூகலமாய் பயணிப்பது போல இருக்கும் அந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு திரையுலகிலும் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்தவர் ஆவார். இவர் என்ன தான் அப்படி இருந்தாலும் தனது கடினமான உழைப்பின் காரணமாக தான் நடிப்பு துறையில் இன்று வரை சிறந்த நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த தவறை மட்டும் ஒருநாளும் பண்ணிடாதீங்க – அப்பறம் வாழ்க்கை முழுக்க வழுக்கை தான்!!

இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். தனது இயல்பான நடிப்பின் மூலமாக தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இந்த திரைப்படத்திற்கு பின்பாக இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோருடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படியாக இருக்க, இவரது சினிமா வாழ்வில் மிக பெரும் திருப்புமுனையாக இருந்த திரைப்படம் என்றால் அது “மகாநதி” திரைப்படம் தான்.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையினை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி மிகவும் நன்றாக நடித்திருப்பார். தற்போது இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படகில் பயணம் செய்வது போல உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here