சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் எப்போது ஆனந்தி போலீசிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் எகிறி உள்ளது. ஆனந்தி கயல் தான் பிரபுவை கொலை செய்து மறைந்தார் என்ற விஷயம் போலீசுக்கு தெரிந்தும் சரியான ஆதாரம் கிடைக்காததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் மூர்த்தி தன் பெரியப்பாவிடம் குடிபோதையில் கயல் ஆனந்தி தான் இந்த கொலையை செய்தார்கள் என்ற உண்மையை உளறி விடுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இதை அவரின் பெரியப்பா உடனே பிரபுவின் அம்மாவிற்கும், எழிலின் அம்மாவிற்கும் சொல்லிவிடுகிறார். உடனே அவர்கள் வந்து ஆனந்தி கயலிடம் நீங்கள் தான் பிரபுவை கொலை செய்துள்ளீர்கள் என சத்தம் போடுகிறார். கயல் இல்லை என்றும் மறுக்க அப்போ உன் குடும்பத்து மேல் சத்தியம் பண்ணு என்று சொல்ல அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.