நாடு முழுவதும் மருத்துவ படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என சில கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் மேம்பாட்டிற்காக ரூ.26 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது மட்டுமல்லாமல் மருத்துவ பயிலும் மாணவர்களுக்கு உதவியாக எய்ம்ஸ் மருத்துவ படிப்பு கல்வி நிறுவனங்கள் 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 1.8 லட்சம் மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று முதுகலை மருத்துவ கல்விக்கான இடங்களை 7000 ஆகவும் உயர்த்தி அசத்தியுள்ளது. இதனால் மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த இடத்திலும் பட்டாசு கடை வைக்கலாம்., அனுமதி உண்டு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!