கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் திருவிழா மே 14 முதல் முதல் ஜூன் 11 வரை நடைபெற இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளதால் தற்போது அதன் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.
பொதுத்தேர்வு மாணவர்களே., மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தயாரா? விண்ணப்பம் விநியோகம்!!!
எனவே, இந்நிகழ்வுக்கு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நாளை ஒரு நாள் மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுகட்டும் விதமாக வருகிற சனிக்கிழமை, அதாவது ஜூன் 3ம் தேதி அரசு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.