அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படியை அரசு உயர்த்தி வருகிறது. இதில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த மார்ச் மாதமும், ராஜஸ்தான், அசாம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறிவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் தொடர்ச்சியாக, தற்போது கர்நாடகா மாநில அரசு அகவிலைப்படியை 31%-லிருந்து 35%-ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது. மேலும், முழு நேர அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், மாவட்ட பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களின் முழு நேர பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.