தமிழக முழுவதும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் லோக்சபா தேர்தல் வர உள்ளதால் மேலும் மகளிர் உரிமை தொகைக்கு மகளிர் உரிமை தொகைக்கான பயனாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
இதில் திமுக எம்பி கனிமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் காலை உணவு திட்டம், நாள் முதல்வன், புதுமை பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!