கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலரும் அவர்களது சொந்த ஊருகளுக்கே சென்று விட்டனர். தற்போது கைதி பட நடிகர் அவரது சொந்த ஊரில் அவரது வீட்டில் மாடு மேய்க்கும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் – மாடு மேய்க்கும் தீனா..!
கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கே சென்று விட்டனர்.
நடிகர் தீனா KPY நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவர் கைதி படத்தில் கார்த்தியுடன் நடித்திருந்தார். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடத்தியுள்ளார். அவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனது சொந்த மாடுகளுக்கு தன் கையால் பால் கறந்து வருகிறார். அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |