கடந்த 2021 ஆம் ஆண்டு உலகையே ஆட்டி படைத்த கொரோனா இப்போது மீண்டும் இந்தியாவில் வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் உருமாற்றம் அடைந்த JN 1 கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒரு நபருக்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கேரளாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதை சுற்றி உள்ள கர்நாடகா மற்ற மாநிலங்களிலும் கொரோனாவை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக இனி வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் சளி, இருமல், காய்ச்சல், சிறுநீரகம், இதய நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.