மாநிலத்தில் கொரோனா தொற்று தற்போது சற்று குறைந்து வருவதால், புதிய தளர்வுகளுடன் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.
மீண்டும் அமல்:
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த இரவு நேர ஊரடங்கில் இரண்டு மணி நேரம் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், ஜிம்கள் மற்றும் ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பூங்காக்கள் தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஜார்கண்ட் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்