நாகரீக வளர்ச்சியால் இன்றைய இளம் தலைமுறையினர் சோசியல் மீடியா வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகளிடையே டிக் டாக் போன்ற செயலிகள் முடக்கப்பட்டு வருகிறது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாடிக்கையாளர்களை கவர ரீல்ஸ், எடிட்டிங் என பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக பலதரப்பட்ட மக்களும் டான்ஸ், பாடல், ஆக்டிங் போன்ற ரீல்ஸ்களை பதிவிடுகின்றனர். இப்படியாக ஒரு சில வீடியோக்கள் உலகப் புகழ் பெற்று வருகிறது. ஆனால் சில கலைஞர்கள் சட்டத்திற்கு புறம்பான வீடியோக்களை பதிவிட்டு பிரச்சனையில் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் நடனமாட ஈரான் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(01.02.2023)-முழு விவரம் உள்ளே!!!
ஆனால் ஒரு ஜோடிகள் சட்டத்தை அவமதிக்கும் வகையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நினைவு சின்னம் ஆசாதி கோபுரம் முன்பு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ்-காக காத்திருந்தார். ஆனால் இந்த வீடியோ ஆதாரமாக வைத்து ஈரான் நாட்டு நீதிமன்றம் அந்த ஜோடிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.