ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சூர்யகுமார் யாதவ்வே அணியில் தொடர்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
இந்திய அணியானது, இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணி இந்த டிராபியை வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், முதுகு வலி காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பரவலான தகவல் வெளிவந்துள்ளது.
ரஞ்சி டிராபி காலிறுதி: 9வது விக்கெட்டில் சதம் விளாசி அசத்திய அதிரடி வீரர்!!
இதனால், காயத்தில் இருந்து மீளாத ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ்வே டெஸ்ட் அணியில் தொடர்வார். இதன் மூலம், சூர்யகுமார் யாதவ் சர்வதேச டெஸ்ட் அணியில் தனது அறிமுக ஆட்டத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி, இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.