இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (டிசம்பர் 28) நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. இதில், மும்பை சிட்டி அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆனாலும் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து, தொடங்கப்பட்ட 2வது பாதியில் மும்பை வீரர் சாங்டே 52 வது நிமிடத்தில் கோல் அடிக்க, 80 வது நிமிடத்தில் விக்ரம் ஒரு கோல் அடித்தார். இவர்களை தொடர்ந்து அதே அணியின் குர்கீரத் சிங் 90 வது நிமிடத்தில் ஒரு கோலை நுழைத்தார். இதன் மூலம், மும்பை சிட்டி அணியானது, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கான டைம் முடிய போகுது…, உடனே முந்துங்கள்!!