சீரியல் விரும்பிகளின் மனதை கவர்ந்த பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் தற்போது தனத்தின் வளைகாப்பு விழா எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது. இதில் எலியும் பூனையுமாக முறைத்து கொண்டிருப்பவர்கள் கண்ணன் மற்றும் பிரசாந்த்.
இவர்களின் இந்த மோதலுக்கு காரணமே இருவரும் ஐஸ்வர்யாவை காதலிப்பது தான். தனக்கு பிரசாந்த் உடன் நிச்சயம் முடிந்தும் கண்ணனை பிரிய மனம் இல்லாமல் கண்ணனை காதலித்து வருகிறார் ஐஸ்வர்ய. இந்த முக்கோண காதல் கதையால் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலின் சுவாரசியம் இன்னும் அதிகரித்து உள்ளது.
இவர்கள் இருவரும் காதலிப்பது பிரசாந்த்க்கு தெரியவரும்போது என்ன பூகம்பம் வெடிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் கண்ணனும் பிரசாந்தும் ஐஸ்வர்யாவை நடுவில் நிக்க வைத்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர்.
அந்த ரீல்ஸில் கமல் ஹாசன், பிரபு தேவாவின் காசு மேல காசு வந்து என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். இருவருக்கும் இடையில் நிற்கும் ஐஸ்வர்யாவை பாடாய் படுத்தும் இந்த இன்ஸ்டா வீடியோவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்