தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி ரசிகர் ஒருவர் அட்வைஸ் செய்த சம்பவம் குறித்த கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரசிகர் அட்வைஸ் :
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. பிள்ளைகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி உள்ளிட்ட பலர் அட்வைஸ் செய்தும் எந்த மாற்றமும் இல்லை. இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் ரெம்ப பிசியாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தன் முடிவில் கொஞ்சம் இறங்கி வந்தாலும், தனுஷ் தன் முடிவில் விடாப்பிடியாக இருந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஜினி ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்த செய்தி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதாவது, “சொன்ன கேளு பாபா, அடம் பிடிக்காத? கணவர் கூட சேர்ந்து வாழ்ந்தா தான் உனக்கு பெருமை, தலைவரும் அதை தான் விரும்புவார்” என அறிவுரை வழங்கியுள்ளார். விரைவில் இது குறித்து இருவரும் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்