ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக 2 அணிகள் இணைய உள்ளன. அதற்கான டெண்டர் கோரும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் அணிகள் இறுதி செய்யப்படுகின்றன. இதனால் ட்விட்டரில் தற்போது #IPL2022 ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெற்று கொண்டிருந்த ஐபில் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இதனால் இந்த விடுபட்ட போட்டிகளை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது ஐபிஎல் 2022 சீசன் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் புத்தம் புதிய இரண்டு அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைய உள்ளன. இதனால் குஷியான ரசிகர்கள் #IPL2022 ஹாஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அக்டோபர் மாதத்தில் இந்த புதிய அணிகள் இறுதி செய்யப்பட இருக்கின்றன.
மேலும் இந்த புதிய இரண்டு அணிகளை ஏலம் எடுக்க தொழிலதிபர் அதானி, நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் தீவிர ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்