ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த வருடம் (2024) மார்ச் மாத இறுதி முதல் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், TRADE WINDOW முறையில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே வாங்கியது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 5 முறை வெற்றி சாம்பியன் பட்டம் வென்றதற்கு முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நிர்வாகம் நீக்கி உள்ளது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமித்துள்ளதாக தனது X தளத்தில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.