இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களுக்கும், சாம்சன் 68 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியில் களம் இறங்கிய வீரர்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் குஜராத் வீரர் ரஷித் கான் பவுண்டரி அடிக்க அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.