ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
ஐபிஎல்:
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் 10 அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 66 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 187 ரன்களை குவிக்க, இந்த இலக்கை சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி 19.4 ஓவரிலேயே 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில் அதிகபட்சமாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50, தேவ்தட் படிக்கல் 51, ஷிம்ரோன் ஹெட்மியர் 46 ரன்கள் எடுத்திருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 14 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 5 வது இடத்தை பிடித்துள்ளது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதாவது, இனி வரும் போட்டியில் RCB, MI மற்றும் KKR அணிகள் தோல்வியைத் தழுவினால் ரன் ரேட்டை பொறுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளது.