பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் நீங்க மயூவை கண்டுக்க மாட்டீங்க என சண்டை போட இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரிக்க இறுதியில் ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். மேலும் நீ என்னை கண்ட்ரோல் பண்ணாத. என் பொண்ணு என்ன கூப்பிட்டாலும் கூப்பிடலனாலும் அவளுக்கு எல்லாத்தையும் நான் தான் பண்ணுவேன் என்று சண்டை போடுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பக்கம் பாக்கியா வீட்டுக்கு பழனிச்சாமி வர குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வர பழனிச்சாமி இருப்பதை பார்த்து ஆத்திரமடைகிறார். பழனிச்சாமி கோபியை பார்த்து யாரோ வந்திருக்காங்க என்று சொல்ல, கோபி வீட்டுக்கு வர அவரை தடுத்து நிறுத்தி நக்கலாக பேசுகிறார்.
பஞ்சாப்பை லீக் சுற்றோடு வெளியேற்றிய ராஜஸ்தான்…, பிளே ஆப் வாய்ப்பை பெற்றதா?? வெளியான புள்ளிவிவரம்!!
ஆனால் கோபி எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல வீட்டில் உள்ளவர்களிடம் அவர் யார் என்று கேட்கிறார். அவன் தான் என் புள்ளை என்று ஈஸ்வரி சொல்கிறார். அடுத்ததாக ராதிகா தன் அம்மாவிடம் கோபி சண்டை போட்டதை சொல்கிறார். அதுக்கு அவரின் அம்மா நீ மயூவையும் கூட்டிட்டு போ என்று ராதிகா வேண்டாம் என்று சொல்கிறார். பின் ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் பாக்கியாவை பற்றி இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.