தற்போது துவங்கியுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் 66 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. HPCA மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக இருக்கும்.
ஏற்கனவே, நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதால் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருந்த மும்பை அணி 5 ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது.
மின் நுகர்வோர்களே., இது இல்லாவிட்டால் மின்சாரம் கட்?? மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!
இதற்கிடையில், இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலாவதாக பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி சார்பில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரப்சிம்ரன் 2 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்களை எடுத்துள்ளது.