மின் நுகர்வோர்களே., இது இல்லாவிட்டால் மின்சாரம் கட்?? மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!

0
மின் நுகர்வோர்களே., இது இல்லாவிட்டால் மின்சாரம் கட்?? மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!
மின் நுகர்வோர்களே., இது இல்லாவிட்டால் மின்சாரம் கட்?? மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வருவதால் A/C, Fan உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகளை பெற்றவர்களின் முன் வைப்புத் தொகையை ஆய்வு செய்யும் பணியை மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி உயரழுத்த இணைப்பை பெற்றவர்கள் சராசரி மின் கட்டணத்தை விட 2 மடங்கு தொகையும் மற்றும் தாழ்வழுத்த இணைப்பை பெற்றவர்கள் 3 மடங்கு தொகையும் முன்வைப்பு தொகையாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு பணிகள் உயரழுத்த பிரிவில் ஆண்டுக்கு ஒரு முறையும், தாழ்வழுத்த பிரிவில் ஆண்டுக்கு இரு முறையும் நடைபெறுவது வழக்கம்.

தமிழக பொதுத்தேர்வு ரிசல்ட்ஸ்.., அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்த ஆய்வின் முடிவில் போதிய இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கடுத்த 30 நாட்களுக்குள் வைப்பு தொகையை செலுத்தாவிட்டால் மின் துண்டிக்கப்படலாம் என மின்வாரிய வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here