ஐபிஎல் லீக் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் வரும் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான லீக் போட்டிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பங்கு பெற்றுள்ள 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதன் முடிவில் 16 முதல் 18 புள்ளிகளை பெறும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வகையில், குஜராத் அணி 13 போட்டிகளின் முடிவில் 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் வரிசையில், CSK, LSG, MI, RCB மற்றும் PBKS (பஞ்சாப்) ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகின்றனர். இதில், பஞ்சாப் அணியானது பிளே ஆப்புக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இன்று டெல்லி அணிக்கு எதிராக மோத உள்ளது.
தனத்தை மட்டம் தட்டி பேசும் பார்வதி.., ஆத்திரத்தில் வீட்டை விட்டு துரத்திய கதிர், முல்லை !!!
டெல்லி அணியானது, 12 போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளை மட்டுமே பெற்று ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் டெல்லி அணி தோற்றால் கூட பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், டெல்லி அணி வெற்றி பெற்றால் பஞ்சாப் அணிக்கு தான் பெரும் பதக்கம் ஆகி விடும். அதாவது, இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவினால் லீக் சுற்றுடன் நடப்பு ஐபிஎல்லில் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே, பஞ்சாப் அணிக்கு வாழ்வா? சாவா? என்பது போல பிளே ஆப்பா? இல்லையா?? போன்றே இன்றைய போட்டி இருக்கும்.