சர்வதேச இந்திய மகளிர் அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று (டிசம்பர் 21) தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்த அணியின் தொடக்க வீரர் ஃபோப் ரன் எதுவும் குவிக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு களம் இறங்கிய தஹ்லியா மற்றும் ஹீலி பொறுப்பாக விளையாடினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தஹ்லியா 8 பவுண்டரிகள் உட்பட 50 ரன்கள் விளாசினார். இவருக்கு பக்கபலமாக நின்ற ஹீலி 38 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை குவித்து 121 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதையடுத்து நாளை 2 ஆம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மீனவ குடும்பங்களுக்கு ரூ. 12500 நிவாரணம்., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!