அணிக்கு திரும்பிய இந்திய வீரர்…, மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??

0
அணிக்கு திரும்பிய இந்திய வீரர்..., மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??
அணிக்கு திரும்பிய இந்திய வீரர்..., மகிழ்ச்சியில் என்ன செய்தார் தெரியுமா??

இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷிற்கு எதிராக டெஸ்ட் தொடர்களை விளையாடி 2-0 என வென்று அசத்தியது. இந்த தொடரில், பல மாதங்களுக்கு பிறகு, இந்திய அணியில் இடம்பெற்ற ஜெய்தேவ் உனத்கட் 2வது டெஸ்டில், 25 ஓவர்களை வீசி 67 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர், இந்த டெஸ்ட் போட்டியை நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக, இந்திய வீரர்கள், கே எல் ராகுல், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட (17) அனைவரிடமும் தனது ஜெர்சியில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளார். இவர், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் (2010ல்), தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோனி தலைமையில் விளையாடிய போதும், அனைத்து இந்திய வீரர்களிடமும் ஜெர்சியில் கையெழுத்து வாங்கி உள்ளார்.

இந்திய அணிக்கு திரும்பும் ஆல்ரவுண்டர்?? களத்தில் இறங்கி அதிரடி காட்டுவாரா??

12 ஆண்டு கால பயணத்தை நினைவு படுத்தும் விதமாக, இவர், இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது ஜெர்சி எண்ணை குறிக்கும் விதமாக #267 மற்றும் # Team India என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here