நாடெங்கிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த நோய் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையிலும் இந்தியா இலங்கைக்கு மருந்து பொருட்களை அளித்துள்ளது.
மருந்து பொருட்கள்
உலகெங்கிலும் கொரோனா வைரசால் மருந்துகளின் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு 10 டன் மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியா அவசர காலங்களில் இலங்கைக்கு எப்பொழுதும் துணை இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இதனை பற்றி இலங்கை அரசு கூறுகையில் ” அவசர காலங்களிலும் இந்தியா எப்பொழுதும் இலங்கையுடன் நிற்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மருந்து பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |