தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜனவரி 3) முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில், வெப்பம் தான் அதிக அளவு காணப்படும். அந்த வகையில், அதனை ஆடுகளத்தின் தன்மையுடன் ஒப்பிட்டால் வேக பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். இங்கு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆட்டம் நடைபெறும் 5 நாட்களிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது. இதன் காரணமாக இப்போட்டி தடையின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த வழி இதுதான்? வெளியான அறிவிப்பு!!!