இந்தியா – பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு விழா – வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கொண்டாட்டம்!!

0

இந்தியா – பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை வெற்றி ஜோதியை ஏற்றுகிறார் பாரத பிரதமர் மோடி. இந்த பொன்விழா அண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த போவதாக திட்டமிடப்பட்ட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போரின் பொன்விழா:

1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசம் உருவாக காரணமாக இருந்த இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் வீழ்த்தி வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு வெற்றியை பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் போரில் தான் பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் அதிகமாக வீரர்கள் கலந்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த போரில் இந்திய தரப்பில் 3800 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 9800 பேரும் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் ராணுவ வீரர்கள் 90,000 பேர் இந்தியா ராணுவத்திடம் சரணடைந்தனர். இரண்டாம் உலகம் போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் இந்தியாவிடம் சரணடைந்தது அப்போது தான்.

இந்த போரில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக தலைநகர் டெல்லியில் தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் போரின் 50-வது பொன்விழா வெற்றி ஆண்டு இந்த வருடம் டிசம்பர் 16ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இந்த பொன்விழா ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொன்விழா ஆண்டின் தொடக்கமாக நாளை டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி ஜோதி ஏற்றிவைத்து தொடங்கிவைக்கிறார். பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மோடியை வரவேற்கிறார். தேசிய போர் நினைவிடத்தில், போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை!!

அங்கு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக 4 வெற்றி ஜோதிகள் ஏற்றப்படுகின்றன. 1971 போரில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் சொந்த ஊர்களுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கும் இந்த வெற்றி ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு விருது பெற்றவர்களின் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

50 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த போரில் பங்குபெற்றவர்களை பாராட்ட போவதாகவும், ராணுவ இன்னிசை நிகழ்ச்சி, கருத்தரங்குகள், கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here